Saturday 27th of April 2024 01:22:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!


இதுவரை அறியப்பட்ட கொரோனா வகைகளை விட அதிக தீவிரமாகப் பரவும் திறன் கொண்டதாக அஞ்சப்படும் ஒமிக்ரோன் வகை கொரோனா மேலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த வகை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில், ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன இந்நிலையில்,

கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE